சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

0

சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் துறை ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், புதிய வனக்காவலர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியதாவது:

நமது பூமி மோசமான சூழ்நிலையில் உள்ளது என்பதை உணர வேண்டும். இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். கடந்த நான்கு ஆண்டுகளில், அரசு பல சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில்:

  • 2,403 ஹெக்டேரில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கம்
  • 1,207 ஹெக்டேர் சதுப்புநிலங்களை மீட்டெடுத்தல்
  • முக்கியமான நீல கார்பன் சூழ்நிலைகளுக்கு உயிர் அளித்தல்
  • தனுஷ்கோடியில் தமிழ்நாட்டின் முதல் கிரேட்டர் பிளமிங்கோ சரணாலய அறிவிப்பு

பல்லுயிர்கள் மற்றும் காலநிலை மாற்றம் இடையே நேரடி தொடர்பு உள்ளதாகவும், தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் திட்டங்களை செயல்படுத்த அரசு முயற்சி எடுக்கிறது. ஆனால் அதைப் போதுமானது அல்ல. மக்கள் இதில் உறுதியாகத் துணை நிற்க வேண்டும். “மீண்டும் மஞ்சப்பை” போன்ற திட்டங்கள் மக்கள் இயக்கமாக மாற வேண்டும். பசுமை பொருளாதாரத்தை நோக்கி தமிழக வளர வேண்டும் என்பது நம் இலக்காக இருக்க வேண்டும்.

இது போன்ற செயல்களில் மக்கள் தங்களின் ஒழுக்கம், பொறுப்புணர்ச்சியுடன் பங்கேற்க வேண்டும். வீடுகளில் குப்பைகளை வகைப்படுத்தி போடுவது முதலிய செயற்திட்டங்களை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here