கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியல்
சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், கடந்த முன் நாளிரவு 9 மணி முதல் இயக்கப்படாததால், சுமார் 5,000 பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானனர். நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், அதிர்ச்சி அடைந்த பயணிகளில் சுமார் 1,000 பேர், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலால், இருபுறத்திலும் மூன்று கிலோமீட்டருக்கு மேல் போக்குவரத்து நின்றுவிட்டது. இதனை சமாளிக்க விரைந்து வந்த காவல்துறையினர், பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், பயணிகள் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கிளாம்பாக்கம் பகுதியில் இரவு முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இறுதியாக, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு நிலைமை மெல்ல மாறியது.
பெருமாள் வீதி உலா காரணமாக, சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டது. இதன் விளைவாக, சில பேருந்துகள் தாமதமாக வந்ததுடன், நள்ளிரவு நேரமெனவே, விரைவான மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.