சென்னை ராமாபுரம் அருகே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதை கட்டுமானத்தின் போது, ஒரு இணைப்பு பாலம் இடிந்து விழுந்து பெரிய விபத்தொன்று நிகழ்ந்தது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் நடைப்பெற்று வரும் இரண்டாவது கட்ட மெட்ரோ திட்டம் மூன்று முக்கிய வழித்தடங்களை உள்ளடக்கியதாகும். இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை செல்லும் 5-வது பாதை சுமார் 44.6 கிலோமீட்டர் நீளமுடையது. இந்த வழித்தடத்தின் போர் – சென்னை வர்த்தக மையம் இடையே பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், ராமாபுரம் அருகே வியாழக்கிழமை இரவு அந்த உயர்மட்ட பாதையின் ஒரு இணைப்பு பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
முதல் கட்ட விசாரணையின் படி, ஒருவரது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுந்த பாலத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்திற்கு மெட்ரோ நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்றுள்ளனர்.