அகமதாபாத் விபத்து எதிரொலி: நடுவானில் பறந்த விமானம் திடீரென சென்னை திரும்பியது

0

அகமதாபாத் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து காரணமாக, அங்கு செல்ல முடியாமல் நடுவானிலேயே திரும்பிய விமானம், சென்னை நகரை மீண்டும் வந்தடைந்தது.

சென்னையிலிருந்து நேற்று மதியம் 1:30 மணியளவில், 182 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நோக்கி புறப்பட்டது.

இந்த நேரத்தில், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. இதன் விளைவாக, ஓடுபாதை முற்றாக முடக்கப்பட்டது.

இந்த தகவல், அகமதாபாத் அருகில் இருந்த இண்டிகோ விமானத்துக்குக் கட்டுப்பாட்டு மையம் வழியாக அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் விமானம் தனது பயணத்தை நிறுத்தி, நடுவானிலேயே திரும்பி சென்னையில் இறங்கியது.

அகமதாபாத் விமான நிலையம் இயல்புநிலைக்கு வந்ததும், சென்னை-அகமதாபாத் விமானப் பயணங்கள் மீண்டும் தொடங்கும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here