தமிழ்நாடு எழுத்தறிவு திட்டத்தில் முதலிடம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவிப்பு
தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட முழுமையாக எழுதவும் படிக்கவும் தெரியாதோர் எழுத்தறிவு பெறும் திட்டத்தின் கீழ் பயின்ற 5 இலட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைவரும் தேர்ச்சி பெற்றதன் மூலம், தமிழ்நாடு 100% தேர்ச்சி விகிதத்துடன் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
“எழுத்தறிவைப் பெறும் இந்த திட்டத்தில் முழுமையாகக் கல்வி இல்லாத 15 வயதிற்கு மேற்பட்டோர் 5 லட்சம் பேர் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு, 100% தேர்ச்சி விகிதத்துடன், நாடு முழுவதும் முதலிடத்தைப் பெற்றிருப்பது பெருமைக்குரியது.
இந்த அருமையான சாதனையை அடைய பாடுபட்ட பள்ளி சாரா மற்றும் பெரியவர்களுக்கான கல்வி இயக்கத்தின் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.