மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒருங்கிணைந்த சர்வர் அமைப்பதற்கான கோரிக்கை

0

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஒருங்கிணைந்த சர்வர் அமைப்பதற்கான கோரிக்கை

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில், ஒருங்கிணைக்கப்பட்ட மைய சர்வரை (Centralised Server) உருவாக்க வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

அவர்கள் கூறியதாவது:

தற்போது ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. மைய கட்டுப்பாட்டு அமைப்பு இல்லாததால், ஒரே தகவலை பலமுறை பதிவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் நேரம் வீணாகிறது, மேலும் ஊழியர்களின் உழைப்பும் பலவந்தப்படுத்தப்படுகிறது.

மேலும், இணையத்தில் கிடைக்கக்கூடிய தகவல்களையும் எக்செல் மற்றும் கூகுள் ஷீட் மூலம் பணி நேரத்திற்கு பிறகு மீண்டும் பதிவு செய்ய வற்புறுத்தப்படுவது, தேவையற்ற மன அழுத்தத்தையும், மேலதிக பணி சுமையையும் ஏற்படுத்துகிறது. கணினி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களிடம் பணி நேரத்தையும் தாண்டி வேலை வாங்கப்படுவது, தலைமையகத்தில் நேரில் வரவழைத்து அவமதிக்கும் விதமாக நடத்தப்படுவது போன்ற நிகழ்வுகளும் உள்ளன.

மேலும், தற்போது பயன்படுத்தப்படும் மென்பொருள் மிகவும் பழமையானதாக உள்ளதால், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப நிர்வாகத்தை திறம்பட மேற்கொள்ள முடியவில்லை. இத்தகைய சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியதுள்ளதை ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here