மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் – ஜூன் 26, தியாகராயநகர்

0

மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் – ஜூன் 26, தியாகராயநகர்

சென்னை தியாகராயநகர் பகுதியில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர் முகாம் ஜூன் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முகாம், சென்னை மத்திய மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. முகவரி: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவகம், சென்னை – 600017.

இந்த முகாமில், அஞ்சல் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான மன்றத் தலைவர் நேரில் விசாரித்து தீர்வு காண்பார். இந்த கோட்டத்துக்குள் வரும் வாடிக்கையாளர்கள், தங்களுடைய புகார்களை ஜூன் 18ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

புகார்கள் பதிவு தபால், பார்சல், மணியார்டர், காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டங்கள் போன்ற சேவைகள் குறித்து இருக்கலாம். புகார்களுடன், அனுப்புநர்/பெறுநர் முகவரி, கணக்கு எண், பாலிசி எண், அஞ்சல் நிலையம் உள்ளிட்ட விவரங்களும் இருக்க வேண்டும்.

கீழ்நிலை அலுவலகங்களில் தீர்வுக்கு வராத பழைய புகார்களே இந்த முகாமில் எடுத்துக்கொள்ளப்படும். புதிய புகார்கள் ஏற்கப்படாது. புகார்கள் சாதாரண அல்லது பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். உறையின் மேல் பகுதியில் “மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்” என குறிப்பிட வேண்டும்.

மேலும், தியாகராயநகர், மயிலாப்பூர், சூளைமேடு, ராயப்பேட்டை, கிரீம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை, கோபாலபுரம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட அஞ்சல் நிலையங்களுக்கான புகார்களை dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here