சிறுவாணி அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்றிய கேரள அரசு!

0

கோவையின் முக்கிய நீர்த்தேக்க ஆதாரமான சிறுவாணி அணை கேரள அரசின் மேலாண்மையில் உள்ளது.

அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 49.53 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே நீர் சேமிக்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை இந்தக் காலகட்டத்தில் தீவிரமடைந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 44.61 அடியை எட்டியிருக்க வேண்டிய நேரத்தில், நீர்மட்டம் 44 அடியை எட்டுவதற்கும் முன்பாகவே கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் கீழ்மதகு வழியாக தண்ணீரை வெளியேற்றினர்.

முழு கொள்ளளவிற்கு நீர் சேமிக்கப்படாமலேயே 44.61 அடி வரையாவது நீரை காக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. இல்லாவிடில் கோடை பருவத்தில் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில்,

“சிறுவாணி அணை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அணை நிர்ணய நீர்மட்டத்தை நெருங்கும் போது, கேரள நீர்வளத்துறை தம்மால் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் வரத்து மற்றும் பாதுகாப்பு அளவுகளை கருத்தில் கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தற்போதைய நிலைமை பரிசீலிக்கையில், இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பருவமழை முடிவடையும் நேரத்தில் அணையில் 45 அடி நீர் தேக்கப்பட்டால், கோடைக்கால தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை. இன்று காலை 147 மி.மீ. மழை அணை பகுதியில், 79 மி.மீ. மழை அடிவாரத்தில் பதிவாகியுள்ளது. அணையிலிருந்து 100 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டுள்ளது,” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here