சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரை அமைக்கப்படும் பாதையில், போரூர் மற்றும் பூந்தமல்லி பைபாஸ் இடையிலான உயர்நிலைப் பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத இந்த மெட்ரோ ரயில்கள் அடுத்த மாதம் பாதுகாப்பு சோதனைகளுக்காக திட்டமிடப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு, இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) குழுவினர் சென்னைக்கு வரவிருப்பதாகவும், அவர்கள் இந்த பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக ஆர்டிஎஸ்ஓ சான்றிதழும், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.