சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் திரும்பியது – இயந்திர கோளாறு காரணம்
சென்னையிலிருந்து மதுரைக்கு நேற்றுக்காலை 8 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் 70 பயணிகள் இருந்தனர். பறப்பின் போது, விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கவனித்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் வழங்கினார். அதிகாரிகள் விமானத்தை திருப்பி சென்னைக்கு கொண்டுவர உத்தரவிட்டனர். அதன் பேரில் காலை 9 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் விமான நிலைய ஓய்வறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விமானப் பழுது சரிசெய்ய, தொழில்நுட்ப நிபுணர்கள் பணியில் ஈடுபட்டனர். இடைஞ்சலுக்குப் பிறகு, பயணிகள் மாற்று விமானத்தில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.