ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கோவையில் வருகை – பாதுகாப்பு தீவிரம்

0

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கோவையில் வருகை – பாதுகாப்பு தீவிரம்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைவரான மோகன் பாகவத் இன்று மும்பையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். நாளை பேரூரில் நடைபெறும் ஒரு தனியார் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் வந்துள்ளார்.

விமான நிலையத்திலிருந்து கார் மூலம், கோவைப்புதூர் அருகேயுள்ள சுண்டக்காமுத்தூரில் உள்ள நாச்சிகோனார் தோட்டத்திற்கு பயணம் செய்தார். அங்கு அவர் இன்றிரவு தங்க உள்ளார்.

நாளை காலை, பேரூர் ஆதீன மடத்திற்கு சென்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். இதையடுத்து, சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, நொய்யல் ஆறு மற்றும் அண்மையில் திறக்கப்பட்ட தர்ப்பண மண்டபத்தையும் பார்வையிடவுள்ளார்.

பின்னர் அவர், கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று, மும்பைக்கு விமானத்தில் திரும்ப செல்கிறார்.

மோகன் பாகவத் கோவைக்கு வருவதை முன்னிட்டு, நகரத்தில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலதிக போலீஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில், மொத்தமாக 263 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here