தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிட மாற்றம் – அரசு உத்தரவு
தமிழ்நாடு அரசு, 55 ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிடங்களை மாற்றி புதிய பதவிகளில் நியமன உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின் படி அதிகாரிகளின் பெயர்களும், அவர்களுக்கு வழங்கப்பட்ட புதிய பதவிகளும் பின்வருமாறு:
- ராஜேந்திர ரத்னூ – முதன்மைச் செயலர் மற்றும் உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்
- ஷில்பா பிரபாகர் சதீஷ் – அரசு செயலர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை
- ச. விஜயகுமார் – கூடுதல் தலைமைச் செயலர், நில சீர்திருத்த ஆணையர்
- மா. வள்ளலார் – அரசு செயலர், சமூக சீர்த்திருத்தத் துறை
- எஸ். நாகராஜன் – வணிகவரி ஆணையர்
- பொ. சங்கர் – அரசு செயலர், உயர் கல்வி துறை
- சி. சமயமூர்த்தி – அரசு செயலர், மனிதவள மேலாண்மைத் துறை
- கோ. பிரகாஷ் – முதன்மைச் செயலர் மற்றும் உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்
- சு. பிரபாகர் – திட்ட இயக்குநர், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம்
- நா. வெங்கடேஷ் – அரசு சிறப்புச் செயலர், நிதி துறை
- ஆர். லில்லி – அரசு சிறப்புச் செயலர், போக்குவரத்து துறை
- சு. கணேஷ் – அரசு சிறப்புச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
- வீர் பிரதாப் சிங் – துணைச் செயலர், பொதுத் துறை
- கே.எம். சரயு – இணைச் செயலர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை
- துரை ரவிச்சந்திரன் – துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை
- க. கற்பகம் – இணைச் செயலர், உயர் கல்வி துறை
- ஆர்.வி. ஷஜீவனா – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம்
- ஸ்ரேயா பி. சிங் – மேலாண்மை இயக்குநர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- ப. மதுசூதன் ரெட்டி – இயக்குநர், நகராட்சி நிர்வாகம்
- சு. சிவராசு – மேலாண்மை இயக்குநர், நகர்ப்புற வளர்ச்சி நிதியம்
- ஜெ. விஜயராணி – மேலாண்மை இயக்குநர், சேமிப்புக் கிடங்கு நிறுவனம்
- தா. கிறிஸ்துராஜ் – இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர், சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்
- கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் – கூடுதல் செயலர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- ச. உமா – கூடுதல் செயலர், சிறப்புத் திட்ட செயலாக்கம்
- வீ.ப. ஜெயசீலன் – இணை ஆணையர் (சுகாதாரம்), சென்னை மாநகராட்சி
- மா.சௌ. சங்கீதா – இயக்குநர், சமூக நலன்
- மா. பிரதீப் குமார் – இயக்குநர், பேரூராட்சிகள்
- ராஜ கோபால் சுன்கரா – இயக்குநர், நில அளவை மற்றும் நில வரித் திட்டம்
- ச. அருண்ராஜ் – மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர்
- நாரணவரே மணிஷ் – மாவட்ட ஆட்சியர், திருப்பூர்
- வெ. சரவணன் – மாவட்ட ஆட்சியர், திருச்சி
- தி. சினேகா – மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு
- கே.ஜே. பிரவீன் குமார் – மாவட்ட ஆட்சியர், மதுரை
- என்.ஓ. சுகபுத்ரா – மாவட்ட ஆட்சியர், விருதுநகர்
- ச. கந்தசாமி – மாவட்ட ஆட்சியர், ஈரோடு
- துர்கா மூர்த்தி – மாவட்ட ஆட்சியர், நாமக்கல்
- கா. பொற்கொடி – மாவட்ட ஆட்சியர், சிவகங்கை
- ஆஷா அஜித் – தலைமை இயக்க அலுவலர், ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் மகளிர் வேலைவாய்ப்பு திட்ட இயக்குநர்
- எம்.பி. அமித் – ஆணையர், திருப்பூர் மாநகராட்சி
- எச்.ஆர். கௌசிக் – வட்டார துணை ஆணையர் (மத்திய), சென்னை மாநகராட்சி
- மோனிகா ராணா – ஆணையர், திருநெல்வேலி மாநகராட்சி
- வி. மதுபாலன் – ஆணையர், திருச்சி மாநகராட்சி
- பானோத் ம்ருகேந்தர் லால் – ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி
- ரா. சரண்யா – ஆணையர், ஆவடி மாநகராட்சி
- ர. அனாமிகா – இணை ஆணையர், நகராட்சி நிருவாகம்
- லலித் ஆதித்ய நீலம் – கூடுதல் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
- அஃதாப் ரசூல் – வட்டார துணை ஆணையர் (தெற்கு), சென்னை மாநகராட்சி
- நிஷாந்த் கிருஷ்ணா – ஆணையர், ஓசூர் மாநகராட்சி
- அர்பித் ஜெயின் – ஆணையர், ஈரோடு மாநகராட்சி
- ர.அ. பிரியங்கா – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர்
- பல்லவி வர்மா – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர்
- அபிலாஷா கௌர் – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நீலகிரி
- திவ்யான்ஷீ நிகம் – கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராமநாதபுரம்
- ஆல்பி ஜான் வர்கீஸ் – இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
- ம. கோவிந்த ராவ் – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம்