தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று (24-ம் தேதி) முதல் ஜூன் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் தாக்கமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை காணப்படும்.

சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்; சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாறில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சோலையாறு – 10 செ.மீ., சின்கோனா – 9 செ.மீ., வால்பாறை – 8 செ.மீ., உபாசி, லால்பேட்டை, கொள்ளிடம் – 7 செ.மீ., சென்னையின் சென்ட்ரல், ஆழியாறு, ஃபார்வூட், அவலாஞ்சி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Facebook Comments Box