திருப்பரங்குன்றம் வழக்கு – இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகள் சொல்வது என்ன?

0

திருப்பரங்குன்றம் வழக்கு – இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலி செலுத்துவது, அசைவ உணவு பரிமாறுவது ஆகியவற்றை தடை செய்யக் கோரி, மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். மேலும், வெவ்வேறு தரப்புகள் – சமணர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தர்கா நிர்வாகம் ஆகியோரும் தனித் தனியாக பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இவை அனைத்தும் நீதிபதிகள் ஜெ. நிஷாபானு மற்றும் எஸ். ஸ்ரீமதி அமர்வில் விசாரணை செய்யப்பட்டது. இதில், மாநில அரசு தரப்பில், பலி செலுத்தும் பழக்கம் அங்கு நிலவுகிறது என்றும், இது சமயரீதியான பழக்கம் என்றும் வாதிடப்பட்டது.

நீதிபதி ஜெ. நிஷாபானு வழங்கிய உத்தரவு:

  • திருப்பரங்குன்றம் மலை பல்வேறு சமயங்கள் அந்தந்த பெயர்களால் அழைக்கப்படுகிறது.
  • தர்கா, முருகன் கோயில், சமணர் கோயில்கள் என பல மத புனித தலங்கள் மலையில் உள்ளன.
  • ஆடு, கோழி பலியிடும் பழக்கம் தர்காவில் மட்டும் அல்லாது, அருகிலுள்ள ஹிந்து கோயில்களிலும் உள்ளது.
  • இது மத மரபுக்கேற்ப நடைபெறும் ஒரு நடைமுறை, எனவே தடை செய்ய முடியாது.
  • மலைப்பகுதியை பாதுகாப்பது அவசியம் என்றாலும், மத சம்பந்தப்பட்ட வழிபாடுகளில் தலையிடக் கூடாது.
  • மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் தேவையில்லை, மாலை 6 மணிக்கு மேல் மலையில் அனுமதி இல்லை.
  • மத நல்லிணக்கம் நிலைத்திருக்க வேண்டும்; குழப்பம் ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

நீதிபதி எஸ். ஸ்ரீமதி வழங்கிய உத்தரவு:

  • இந்த மலை “திருப்பரங்குன்றம் மலை” என்றே அழைக்கப்பட வேண்டும்; வேறு பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது.
  • தர்காவில் ஆடு, கோழி பலியிடும் நிகழ்வுகளுக்கு உரிமையியல் நீதிமன்றத்திலிருந்து அனுமதி பெற வேண்டும்.
  • மலைப்பகுதியில் மின்சார வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த இயலாது – இதனால் மலை சேதமடைய வாய்ப்பு உள்ளது.
  • மலைப்பகுதி முழுவதையும் மத்திய தொல்லியல் துறை சர்வே செய்து, கோயில்கள் மற்றும் தர்காவின் எல்லைகளைப் பிணைத்தறிய வேண்டும்.
  • தர்காவின் புனரமைப்பு தொல்லியல் துறையின் அனுமதியுடன் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

முடிவில்:

இரு நீதிபதிகளும் முற்றிலும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கு இறுதி முடிவெடுப்பதற்காக தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here