ரூ.4 கோடி மதிப்பிலான சொத்தை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்

0

ரூ.4 கோடி மதிப்பிலான சொத்தை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கிய முன்னாள் ராணுவ வீரர்

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள ஏ.கே.படவேடு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஜயன் (வயது 68) தனது ரூ.4 கோடி மதிப்பிலான இரண்டு வீட்டு பத்திரங்களை ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார்.

விஜயனின் மனைவி கஸ்தூரி அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது இரு மகள்கள் திருமணமாகி வேறு ஊரில் வசிக்கின்றனர். சமீப காலமாக விஜயன் மற்றும் கஸ்தூரி தம்பதியிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியுள்ளன. இந்த மன உளைச்சலின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.


விழாவில் கலந்து கொண்ட கோயில் நிர்வாகத்தினர் விசாரித்தபோது, “இந்த சொத்து பத்திரங்களை ரேணுகாம்பாள் அம்மனுக்கு காணிக்கையாக அளிக்கிறேன்” என்று விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவலை கோயில் நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற உண்டியல் திறப்பு நிகழ்வின் போது, விஜயன் காணிக்கையாக வைத்திருந்த வீட்டு பத்திரங்கள் உறுதி செய்யப்பட்டது. அறநிலைய துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் மேற்பார்வையில் இந்த உண்டியல் எண்ணிக்கை நடை பெற்றது.

உதவி ஆணையர் சண்முகசுந்தரம் கூறியதாவது: “இந்த பத்திரங்கள் அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்படும். பின்னர் அதற்கேற்ப விசாரணை நடத்தப்படும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here