தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று (ஜூன் 26) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் கூறியிருப்பதாவது:

மேற்கு திசை காற்றில் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாட்டின் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜூலை 1-ம் தேதி வரை லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் இன்று கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் உள்ளது. மேலும், ஜூன் 27 மற்றும் 28-ம் தேதிகளில் கோவை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் மீண்டும் கனமழை காணப்படலாம்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகமழை பதிவாகிய பகுதிகள்:

  • கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு – 9 செ.மீ.
  • வால்பாறை – 8 செ.மீ.
  • உபாசி, சின்கோனா, சோலையாறு, பார்சன் பள்ளத்தாக்கு (நீலகிரி) – 7 செ.மீ.
  • அவலாஞ்சி, மேல்பவானி – 6 செ.மீ.
  • திற்பரப்பு (கன்யாகுமரி) – 4 செ.மீ.
Facebook Comments Box