ரேஷன் கடைகளில் எடை போட்டு விற்பனை: மத்திய, மாநில அரசுகளுக்கு பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தின் கீழ் மின்னணு விற்பனை கருவியுடன் மின்னணு எடை தராசையும் இணைத்துச் செயல்பட வேண்டும்” எனக் கோரப்பட்டது. இதன் மூலம் உணவுப் பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுவதை உறுதி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய முறையால், தினசரி வெறும் 20 குடும்பங்களுக்கே பொருட்கள் வழங்க முடிகிறது. மேலும், விநியோகிக்கப்படும் பொருட்கள் ஏற்கனவே எடை குறைவாக இருப்பதால், தவறே செய்யாத கடை ஊழியர்களே தங்கள் ஊதியத்தில் இழப்பை சந்திக்கின்றனர் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுவை இன்று (ஜூன் 26) விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மத்திய மற்றும் மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார் மற்றும் விசாரணையைத் தொடர ஒத்திவைத்தார்.

Facebook Comments Box