கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்: டிடிவி.தினகரன் கருத்து

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியதாவது:

திமுகவின் அமைச்சர்கள் பொதுமக்களை தவறாகப் பேசி அவமதித்து வருகின்றனர். இதற்கான தக்க பதிலை மக்கள் 2026-ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அளிப்பார்கள்.

திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையை அதிகரிக்கச் செயற்படுகிறார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகும் வாய்ப்பு இருக்கிறது.

தமது கொள்கைகள் வேறுபட்டாலும், திமுகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் நோக்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளோம். இந்தக் கூட்டணி முன்னேறுவதைக் கண்டு திமுக அணியினர் பயப்படுகின்றனர். தமிழ்நாட்டில் இந்த கூட்டணியின் தலைமையிலுள்ள கட்சி அதிமுகதான். முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷா ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

Facebook Comments Box