தமிழ்நாடு மின் வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் – ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் நியமனம்

தமிழ்நாடு மின் வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் – ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் நியமனம்

தமிழ்நாடு மின்வாரியத்தில் திமுகவின் தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி என். கிருபாகரனை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை, முன்னாள் தஞ்சாவூர் சரக செயலாளர் பால வெங்கடேஷ் தாக்கல் செய்தார். அதில், “சங்கத்திற்கு கடைசியாக 2019-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2022-இல் முடிவடைந்தது. ஆனால் புதிய தேர்தல் நடத்தாமல் தற்போதைய நிர்வாகிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.

இந்த மனு நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. எதிர்பாராதவிதமாக, சங்க நிர்வாகம் 2021-ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தி, பொதுக்குழு ஒப்புதலை பெற்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் நீதிபதி, அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2024-இல் முடிவடைந்துவிட்டதைக் குறிப்பிட்டார்.

இதையடுத்து, நீதிபதி என். கிருபாகரனை நிர்வாகியாக நியமித்து, அவரின் தலைமையில் ஆறு மாதங்களில் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். வழக்கு இதுடன் முடிக்கப்பட்டது.

Facebook Comments Box