20 ஆண்டுகளுக்குப் பிறகு தைலாபுரத்துக்கு வந்த ராம சுகந்தன் – பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து மரியாதை நிமித்தமாக உரையாடல்

தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகனும், மாநில துணைத்தலைவருமான ராம சுகந்தன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தைலாபுரத்துக்கு வருகை தந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார்.

முன்னாள் பிரதமர்களான நரசிம்மராவும் வாஜ்பாயும் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக அரசியலில் முக்கியப் பங்கு வகித்தவர். பாமக நிறுவனர் ராமதாஸுடன் நெருக்கமான உறவு இருந்தபோதிலும், அரசியல் காரணங்களால் சில மனவெறுப்புகள் ஏற்பட்டன. அவரது மரணத்தைத் தொடர்ந்து (2002), அவரது குடும்பம் தைலாபுர வருகையைத் தவிர்த்துவந்தது.

இந்நிலையில், பாமகவில் நடைபெற்று வரும் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கிடையிலான அதிகாரப் போட்டி, கட்சி மையமாக இருக்கும் தைலாபுரத்தை மீண்டும் அரசியல் கலந்த ஆலோசனைகளின் மையமாக மாற்றியுள்ளது. இந்த நிலையில், பழைய நெருக்கங்களை மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ராம சுகந்தனும் தைலாபுரத்துக்கு வந்த அவர், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து உரையாடினார். பின்னர் அவர் கூறுகையில், “இன்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு தைலாபுரம் வந்துள்ளேன். ராமதாஸை மரியாதை சுமந்த சந்திப்பாக சந்தித்தேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். பழைய நினைவுகளை அவர் பகிர்ந்தார். என் தந்தையாருடன் இருந்த நட்பை அவர் நினைவுகூர்ந்தார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் பேசினோம். தந்தை மகன் ஒருங்கிணைப்பு குறித்து எந்தவிதமான பேச்சும் நடைபெல்லை. நான் அவருக்கு ஆலோசனை வழங்கும் நிலை அல்ல. இது அரசியலற்ற, சாதாரண சந்திப்பே. தைலாபுரத்திற்கு தொடர்ந்து வருமாறு ராமதாஸ் அழைத்தார். அவருக்கு எனது நன்றி” என்றார்.

இதற்கு முன்னர், பாமகவில் இருந்து வெளியேறி தமிழக வாழ்வுரிமை கட்சியை நிறுவிய வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட பலரும் தைலாபுரத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box