WhatsApp Channel
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் செயல்படும் மதுபான பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி செயல்பட்ட 4 மதுபான பார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கலால் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் மதுபான பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Discussion about this post