தமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி ஏற்படுத்தப்பட்டுள்ள கோயில் அடிமை நிறுத்து இயக்கம் டிவிட்டர் டிரெண்டிங்கில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
கோவை ஈஷா யோகா மையநிறுவனர் சத்குரு வெளியிட்ட அறிக்கை: ட்விட்டரில் நேற்று ஏராளமானோர் கோயில் அடிமை நிறுத்து
இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோயில் அடிமைநிறுத்து (#FreeTNTemples & #People HaveSpoken) என்ற ஹாஷ்டேக்கு
களை டிரெண்ட் செய்தனர். இது தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இதுதொடர்பாக சத்குரு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் “3 கோடி மக்கள் தங்களுக்கு சொந்தமானதை ஆணித்தரமாக கேட்டுள்ளனர். தமிழ் கோயில்களை புனரமைப்போம். அரசியலமைப்புச் சட்டப்படி என் உரிமையை எனக்குமீட்டுக் கொடுத்து, கோயில்களை விடுவிப்பவருக்கே என் ஓட்டு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் அவர் “தமிழ் மண்ணில் பிறந்தோர் கோயில்களை விடுதலை செய்ய உறுதியேற்க வேண்டும். தமிழ் கோயில்கள் மீண்டும் முழுமையான, வைபவமான நிலைக்கு வர வேண்டுமென்றால், அவை அரசாங்கத்தின் கரங்களில் இருந்து பக்தர்களின் கரங்களுக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தமிழக கோயில்களை அரசிடமிருந்து விடுவிக்க வலியுறுத்தி சத்குரு ‘கோயில் அடிமை நிறுத்து’ எனும் இயக்கத்தை தொடங்கினார். இதற்காக அழியும் நிலையில் இருக்கும், நூற்றுக்கணக்கான கோயில்களின் அவலநிலை குறித்த வீடியோக்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.
கோயில்களை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சத்குருவின் கோயில் அடிமை நிறுத்து இயக்கம் வலு சேர்த்துள்ளது. தற்போது இக்கோரிக்கை பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இவ்வியக்கத்துக்கு மிஸ்டு கால்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்ததை குறிப்பிட்டு, சத்குரு, தமிழக முதல்வருக்கும், எதிர்க்கட்சித் லைவருக்கும் கோயில்களை விடுவிக்க உடனடியாக செயல்பட வேண்டும் என்று கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேசத்தில் போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். யார் இந்த...
கஜகஸ்தானில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது....
நீட் தேர்வில் முறைகேடு செய்து இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி...
மகாராஷ்டிராவில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் புனேவில்...
Discussion about this post