சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது பணியாற்றி வரும் நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் (K.R. ஸ்ரீராம்), இன்னும் இரண்டரை மாதங்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றி நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர். ஸ்ரீராம், கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இவர் இவ்வாண்டு அதே தேதியில் ஓய்வுபெறவிருக்கிறார். இந்த சூழ்நிலையில், அவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்குத் தலைமை நீதிபதியாக மாற்றுவதற்கும், அங்கு தற்போது பதவி வகித்து வரும் நீதிபதி அக். ஸ்ரீவத்ஸவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கும் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் மத்திய அரசிடம் கடந்த மே மாதத்தில் பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், கே.ஆர். ஸ்ரீராமுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் ஓய்வு பெற மிக குறைந்த காலமே உள்ளபோதும், இந்த மாற்றம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் பட்டு தேவானந்த் என்பவரையும், ஆந்திரா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியமைத்து நியமிக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

Facebook Comments Box