அதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு முடிவு வெளியீடு

0
 

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி மத்தியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் விலகி இரு கட்சிகளுக்கும் இடையே சட்டப்பேரவை கூட்டணி உறுதியானது.

இதற்கிடையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பாமக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், அதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டது. பாமக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை முதல்வர், துணை முதல்வர் சற்றுநேரத்தில் அறிவிக்கவுள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

20-27 தொகுதிகள் வரை பாமகவிற்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here