“நான் சொல்வதற்கு ஏதுமில்லை” – அன்புமணியின் பொதுக்குழு குறித்து ராமதாஸ் விரக்தி
மகன் அன்புமணி கூட்டிய பொதுக்குழு குறித்த கேள்விக்கு நான் சொல்வதற்கு ஏதும் இல்லை என விரக்தியுடன் கூறிவிட்டு பூம்புகார் மாநாட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (ஆக. 9) புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நேற்று (ஆக. 9) நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் ‘பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ், பொது செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா’ ஆகியோர் மேலும் ஓராண்டுக்கு பதவியில் நீடிப்பார்கள் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பூம்புகாரில் நாளை(10-ம் தேதி) நடைபெற உள்ள வன்னிய மகளிர் பெருவிழா மாநாட்டுக்கு, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று(ஆக. 9) பிற்பகல் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் கூறும்போது, “நான் சொல்வதற்கு ஏதுமில்லை. பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் பூம்புகார் மாநாட்டுக்கு வாருங்கள். வேறொன்றும் சொல்வதற்கு இப்போது இல்லை” என்றார். அவரிடம் அன்புமணி கூட்டிய பொதுக்குழு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல், ஓட்டுநரை காரை இயக்குமாறு கூறி, புறப்பட்டு சென்றார்.