டிட்டோஜேக் போராட்டம்: ஆகஸ்ட் 14-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் முன்னிட்டு, தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
டிட்டோஜேக், தலைமைச் செயலகத்தை ஆகஸ்ட் 22-ம் தேதி முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, தொடக்கக் கல்வித்துறை அமைச்சகம், டிட்டோஜேக் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து உள்ளது.
அந்த பேச்சுவார்த்தை, தொடக்கக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், சென்னையில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில், டிட்டோஜேக் உயர் நிலை குழு பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் அறிவித்துள்ளார்.