M.Ed சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம்: அமைச்சர் கோவி. செழியன்
அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட தகவலில், “2025-26 கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று (11.08.2025) முதல் 20.08.2025 வரை நடைபெறும்.
தமிழ்நாட்டில் M.Ed பாடநெறி செயல்படும் 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 300 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்களை மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
20.08.2025 அன்று பதிவு முடிவடைந்த பின், தரவரிசைப் பட்டியல் 25.08.2025 அன்று வெளியிடப்படும். சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும். முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 முதல் தொடங்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.