பயிர் கடன் ரத்து குறித்த கனிமொழியின் கருத்துக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. வெற்று அறிக்கை நாயகன் ஸ்டாலினின் படத்தை உறுதி செய்த கனிமொழிக்கு நன்றி எனவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் சொல்லிக் கொண்டதாய் நினைத்துக்கொண்டே இருங்கள், ஆனால் செய்யப்போவது நாங்கள் மட்டும்தான் எனவும் கனிமொழிக்கு அதிமுக கூறியுள்ளது.
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நேற்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் ஸ்டாலின் சொல்வதையெல்லாம் செய்யத் துடிக்கும் முதலமைச்சர் பழனிச்சாமிக்கு நன்றி என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் ரத்து என ஸ்டாலின் கூறிய நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் கனிமொழியின் கருத்துக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அறிக்க விடாமல் நாங்கள் அடிக்கல் நாயகனாக அனைத்து திட்டத்தையும் துவங்கி செயல்படுகிறோம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. ஆம் கனவுகாணும் உரிமை அனைவருக்கும் உண்டு, பல ஆண்டுகளாக முதல்வர் கனவு கண்டு கொண்டுதானே இருக்கிறார் மு.க ஸ்டாலின், என்ன பயன்? கடைசிவரை கனவு மட்டுமே காண வாழ்த்துக்கள். என பதிவிட்டு உள்ளது. மேலும் மற்றொரு டுவிட்டரில் பதிவிட்டுள்ள அதிமுக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் சொல்லிக்கொண்ட தாய் நினைத்துக் கொண்டே இருங்கள் ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெற்று அறிக்கை நாயகன் என்ற ஸ்டாலினின் பட்டத்தை உறுதிசெய்த கனிமொழிக்கு நன்றி என்றும் பதிவிடப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். யார் இந்த...
கஜகஸ்தானில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது....
நீட் தேர்வில் முறைகேடு செய்து இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி...
மகாராஷ்டிராவில் கர்ப்பிணிகள் உள்ளிட்ட சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் புனேவில்...
Discussion about this post