தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு சில பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு

தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

தமிழக நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காணப்படுகிறது. இதன் விளைவாக மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த ஆறு நாட்களுக்கு இடையிடையே லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று வானம் பகுதியளவில் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் 60 கி.மீ. வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அந்தப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box