பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – திருச்சி உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

பயணிகள் வசதிக்காக, தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ரயில் உட்பட 4 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே முக்கிய வழித்தடங்களில் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

இந்த ரயில்களுக்கு பயணிகள் வரவேற்பை கருத்தில் கொண்டு அவை நீட்டிக்கப்படுகின்றன. அதன்படி, தாம்பரம் – திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயில் (06191) செப்.2 முதல் நவ.30 வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190) கூட மேற்கண்ட நாட்களில் செப்.2 முதல் நவ.30 வரை இயக்கப்பட உள்ளது. இருமார்க்கமாக தலா 65 சேவைகள் நடைபெறுகின்றன.

மேலும், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையேயும் சிறப்பு ரயில் சேவை செப்.7 முதல் நவ.30 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box