ரூ.2.53 கோடி செலவில் பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற முடிவு
ரூ.2.53 கோடியில் பழைய பாம்பன் ரயில் பாலத்தை அகற்ற ரயில் உள்கட்டமைப்பு நிறுவனம் ஆர்விஎன்என் (Rail Vikas Nigam Limited) ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மண்டபம் நிலப்பரப்பு மற்றும் ராமேசுவரம் தீவை இணைக்கும் முக்கியப் பாதையில் பாம்பன் ரயில் பாலமும், இந்திராகாந்தி சாலைப் பாலமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 1914-ல் திறக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம் (செஷர்ஸ் பாலம்) நாட்டில் கடலின் நடுவே அமைக்கப்பட்ட முதல் ரயில் பாலமாகும். இதில் நடுவில் கப்பல்கள் செல்வதற்காக தூக்குப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
நூறாண்டுகளுக்கு மேல் பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால், 2019-ல் புதிய பாம்பன் ரயில் பாலத்தை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். புதிய பாலம் 2020-ல் கட்டப்பட்டு, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி திறப்பு செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து நடக்கிறது.
இதன்படி பழைய பாம்பன் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. அறிவிப்பின் படி, 2.3 கி.மீ நீளம் கொண்ட பழைய பாலத்தில் உள்ள நடுவில் தூக்குப்பாலம் மற்றும் கர்டர் பாலம், தண்டவாளங்களை அகற்ற ரூ.2.53 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வரும்நாள் செப்டம்பர் 9 காலை 11 மணி வரை உள்ளது.
110 ஆண்டுகள் கடந்த வரலாற்றுச் சிறப்புள்ள பாம்பன் ரயில் பாலத்தை ரயில் அருங்காட்சியத்தில் வைப்பது பொதுமக்களில் எதிர்பார்ப்பு எழுப்பியுள்ளது.