தவெக மதுரை மாநாட்டுக்குப் பிறகு புதுச்சேரி முதல்வருடன் புஸ்ஸி ஆனந்த் திடீர் சந்திப்பு

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு முடிந்த பின்னர், பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை திடீரென்று சந்தித்து பேசியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் தலைவர் விஜய், ஆளும் பாஜகவையும், தமிழகத்தில் ஆளும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார். அதற்கு பிறகு புஸ்ஸி ஆனந்த் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார். இச்சந்திப்பில் வெளியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

முதல்வர் ஆதரவாளர்கள் கூறியதாவது: “முதலாவது மாநாட்டின் போது அப்பாபைத்தியம் சுவாமி கோயில் ஆசிர்வாதம் செய்து புஸ்ஸி ஆனந்த்க்கு எலுமிச்சை வழங்கினார். இரண்டாவது மாநாட்டிற்கான தேதி, நேரம் மற்றும் பிற விபரங்களை விஜய்யின் பிறந்த ராசி, நட்சத்திரம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டதால் புஸ்ஸி ஆனந்த் நன்றி தெரிவித்து பேசினார்.”

ஏற்கெனவே புஸ்ஸி ஆனந்த் மூலம் தலைவர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. மதுரை மாநாட்டுக்குப் பிறகு, புஸ்ஸி ஆனந்த் தனது கருத்துகளை முதல்வருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக ரங்கசாமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box