‘அடக்கி வாசிங்க ப்ரோ’ – மதுரையில் திமுகவினர் விஜய்யை கண்டித்து போஸ்டர்கள்

மதுரை அருகே பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி தவெக கட்சியின் மாநில மாநாடு நடந்தது. இதில் கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரையாற்றி, திமுக ஆட்சியை பல்வேறு நிலையில் விமர்சித்தார் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என்றும் மேடையில் குறிப்பிடினார். இதற்குப் பின்னர், திமுகவினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, மதுரை தெற்கு மாவட்டத் திமுக இளைஞரணி திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும் விதமாக, அவரை எச்சரிக்கும் நோக்கில் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளது. போஸ்டர்களில் ‘வாட் ப்ரோ, ஓவர் ப்ரோ, அடக்கி வாசிங்க ப்ரோ’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மதுரை மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு எதிர்வினையாக, இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பரவிக் வைரலாகி வருகிறது.

Facebook Comments Box