இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, தலையில் ஏற்பட்ட காயத்தினால் சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் தேதி அவர் வீட்டில் தவறி கீழே விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தலையில் தையல் போடப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
100 வயதை எட்டியுள்ள நல்லகண்ணுவுக்கு, வயது மூப்பு காரணமாக சில உடல்நல சிக்கல்கள் இருந்து வந்ததால், நரம்பியல், நுரையீரல், இதயம் ஆகிய துறைகளின் நிபுணர்கள் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. இன்னும் சில நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை இயக்குநரும் மூத்த இதய நிபுணருமான டாக்டர் தில்லை வள்ளல் தெரிவித்துள்ளார்.