தமிழகத்தில் செப்டம்பர் 3 வரை மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 29) முதல் செப்டம்பர் 3 வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை நிலைமை:
- ஒடிசா கடலோரத்திற்கு அருகே இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்த நிலையில் சத்தீஸ்கரில் நிலவி வருகிறது.
- தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் மழை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
- ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சில இடங்களில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சென்னை வானிலை:
நாளை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தென் தமிழக கடலோரம், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளையும் நாளை மறுதினமும் மணிக்கு 40–50 கி.மீ., இடையிடையே 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மழை பதிவுகள் (கடந்த 24 மணி நேரம்):
- கோவை மாவட்டம் சின்னக்கல்லார் – 6 செ.மீ.
- சோலையார் – 5 செ.மீ.
- உபாசி, வால்பாறை – தலா 4 செ.மீ.
- சின்கோனா, நீலகிரி (அவலாஞ்சி, தேவாலா), திருவள்ளூர் (ஊத்துக்கோட்டை) – தலா 3 செ.மீ.
- தஞ்சாவூர் (வெட்டிக்காடு), திருவள்ளூர் (பள்ளிப்பட்டு), நீலகிரி (விண்ட் வொர்த் எஸ்டேட், மேல் பவானி, பந்தலூர், பார்வூட்), கன்னியாகுமரி (நெய்யூர், முள்ளங்கினாவிளை), திருநெல்வேலி (நாலுமுக்கு), கோவை (ஆழியார்) – தலா 2 செ.மீ.
Facebook Comments Box