முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தால் பலன் இல்லை – தமாகா தலைவர் ஜி.கே.வாசன்
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் தமிழகத்திற்கு எந்த பயனையும் அளிக்காது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள மடப்புரத்தில், போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த கோயில் காவலர் அஜித்குமாரின் குடும்பத்தினரை ஜி.கே.வாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி, முன்னாள் எம்எல்ஏ உடையப்பன், மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், ராஜலிங்கம், கவுன்சிலர்கள் பாரத்ராஜா, வெங்கடேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
- ஸ்டாலின் திட்ட முகாமில் மக்கள் கொடுத்த மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து கிடப்பது, அந்த திட்டத்தின் உண்மையை வெளிப்படுத்துகிறது. அது வெறும் வாக்கு வங்கிக்காக செய்யப்பட்டது என்பதையும் காட்டுகிறது. ஆனால் சில அதிகாரிகள் மட்டும் பலிகடா ஆக்கப்பட்டனர்.
- அஜித்குமார் மரணத்திற்கு பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரியது. காவல் துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மத்திய அரசு மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டங்களும், பழனிசாமியின் வெற்றிகரமான வெளிநாட்டு பயணமும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலம் சேர்த்துள்ளது.
- முதல்வரின் வெளிநாட்டு பயணங்களால் தமிழகத்திற்கு பயனளிக்கும் வகையில் எதுவும் கிடைக்கவில்லை. இதுவரை இதுகுறித்து வெள்ளை அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. தேர்தலுக்கு மிக அருகில் நடைபெறும் இந்தப் பயணம் பயனற்றது.
- திமுக அரசு மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது. மாணவர்கள் நலனுக்காக தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
- ஆடு, மாடு, மரங்களுக்கு மாநாடு நடத்திய சீமான் பாராட்டத்தக்கவர்; அவரை விமர்சிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Facebook Comments Box