கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில், நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்ற தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து, இன்று அவர் வகித்து வந்த இரு முக்கிய பொறுப்புகளையும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்த கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ இன்று முதல் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது.

இதேநேரத்தில், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று காலை அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் ஒன்றாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்த ஆலோசனைக்கு பின்னர் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box