வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம்: செப்டம்பர் 22-க்குள் கருத்துகளை அனுப்புமாறு அஞ்சல் துறை அறிவிப்பு

தமிழக அஞ்சல் துறை சார்பில் நடைபெற உள்ள வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாமுக்கான கருத்துகளை, வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘டாக் சேவா ஜன் சேவா’ திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வட்ட அஞ்சல் துறை வட்ட அளவிலான குறை தீர்க்கும் முகாமை நடத்துகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் 11,832 அஞ்சல் நிலையங்களில் சேவை பெறும் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

அஞ்சல் சேவையின் தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்துவது குறித்து கருத்துகளை, “டாக் அதாலத்” என்ற தலைப்பில்,

ஏ. சுந்தரேஸ்வரி, உதவி இயக்குநர், முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், சென்னை – 600002 என்ற முகவரிக்கு செப்டம்பர் 22-க்குள் அனுப்பலாம். அதேபோல், pg.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் கருத்துகளை அனுப்பலாம்.

இந்த தகவலை தமிழக அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box