“விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும் உறுதி, ஆனால் அமமுக பங்கேற்பு குறித்து இப்போது சொல்ல முடியாது” – தினகரன்

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:

“பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் சூழ்நிலையில், நாங்கள் அந்த கூட்டணியில் சேர்வது சாத்தியமில்லை. எங்களுடைய தெளிவான கோரிக்கை – பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது. இதிலிருந்தே மற்ற விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

விஜய்யின் பிரச்சாரங்களை நானும் தொலைக்காட்சியில் கவனித்தேன். அதிகமான இளைஞர்கள், இளம் பெண்கள், குறிப்பாக 40 வயதுக்குள் உள்ளவர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் பேசியதாக நான் நினைக்கவில்லை. இருந்தாலும், யாராவது ஜெயலலிதா பாணியில் பேசியால், அது மகிழ்ச்சியே.

பெரம்பலூரில் விஜய் சென்றது நள்ளிரவாக இருந்தது. அந்த நேரத்திற்குப் பிறகு பிரச்சாரங்களை நிறுத்தியிருக்க வேண்டும்.

நான் முன்பே பலமுறை கூறியபடி, தவெக தலைவர் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயமாக உருவாகும். ஆனால் அதில் அமமுக இணைவதா என்பதை இப்போதே சொல்ல முடியாது. அதுபோலவே சீமான் தலைமையிலும் ஒரு கூட்டணி உருவாகும். எனவே, தமிழகத்தில் நான்கு முனை போட்டி தவிர்க்க முடியாத ஒன்று” என்று தினகரன் தெரிவித்தார்.

Facebook Comments Box