“எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள்” – விஜய்யை மறைமுகமாக சாடிய ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் 117-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தவெக நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வழிநடத்தி வருகிறார். புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எம்ஜிஆரின் படத்தைப் பயன்படுத்தி செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள். எம்ஜிஆர் படத்தைப் பயன்படுத்த தகுதி உள்ள கட்சி அதிமுக மட்டுமே. திரை நட்சத்திரங்களைச் சுற்றி கூட்டம் கூடுவது இயல்பு; ஆனால், அவர்கள் ரசிகர்களோ, கட்டுக்கோப்பான தொண்டர்களோ இல்லாததால் அந்த கூட்டம் வாக்காக மாற வாய்ப்பு இல்லை. மூன்றாவது அணி அமைக்கலாம், ஆனால் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் அதிமுக, திமுகவிற்கு மட்டுமே வலுவான கிளை அமைப்பு உள்ளது. வேறு கட்சிகள் கூட்டணி சேரலாமே தவிர தனியாக நின்றோ, மூன்றாவது அணி அமைத்தோ வெற்றி பெற முடியாது. எடப்பாடி பழனிசாமியின் சொல்வதே கூட்டணியின் வேத வாக்கு; வேறு யாரின் கருத்தையும் பொருட்படுத்த முடியாது” என்று அவர் வலியுறுத்தினார்.

Facebook Comments Box