“பாமக எம்.எல்.ஏ.க்கள் எப்போதும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் விருப்பம்
சேலம் அருகே கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 5,000-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வங்கி கடன் இணைப்பும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசியதில்,
“சேலத்தைச் சேர்ந்த பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம் (அன்புமணி ஆதரவாளர்), அருள் (ராமதாஸ் ஆதரவாளர்) இருவரும் திமுக அரசின் திட்டங்களைப் போட்டிப் போட்டுப் பாராட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டத்திற்கு அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது என்பதற்காக அவர்கள் ஒருமித்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருந்து, மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும். இதை உங்கள் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று உதயநிதி தெரிவித்தார்.