கிறிஸ்துவ மதத்தில் இருந்து மீண்டும் ஹிந்து மதத்திற்கு மாறியவர்கள்
ஹிந்து மதத்தில் மீண்டும் இணைந்த 21 பெண்கள்
திருப்பரங்குன்றம், செப். 20 – மதுரை திருப்பரங்குன்றத்தில் கிறிஸ்துவ மதத்திலிருந்து 21 பெண்கள் மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்த தாய் மதம் தழுவும் விழா நடந்தது.
ஹிந்து முன்னணி நிருவனர் ராமகோபாலன் அவர்களின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்விழா நடைபெற்றது. மதுரை அனுப்பான டியை சேர்ந்த 21 பெண்கள் கிறிஸ்துவ மதத்திலிருந்து விலகி மீண்டும் ஹிந்து மதத்தில் இணைந்தனர்.
அவர்கள் நேற்று சரவண பொய்கையில் நீராடி, ஆறு முக நயனர் கோவிலில் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்து, “வெற்றி வேல் வீரவேல்” என முழங்கி, ஹிந்து மதத்தில் இணைந்தனர்.
அரசுப்பாண்டி கூறுகையில்:
“பல்வேறு சலுகைகள் தருவதாக கூறி ஹிந்துக்களை மாற்று மதத்திற்கு அழைத்து செல்கின்றனர். ஆனால், எவ்வித சலுகையும் கிடைக்காமல் அவர்கள் அங்கு துன்பப்படுகின்றனர். இதனால் அவர்கள் விரும்பி மீண்டும் ஹிந்து மதத்தில் தங்களைக் இணைத்துக் கொண்டனர்.”