தமிழகத்தில் காவல் துறையினர் மீதான புகார் விசாரணைக்கு தனிக் குழுக்கள் அமைப்பு – அரசு விளக்கம்

காவல் துறையினர் மீதான புகார்களை விசாரிக்க தமிழகத்தில் மாநிலம், மாவட்டம் மற்றும் மாநகர் அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருச்சியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனுவில், “காவல் நிலைய மரணம், அத்துமீறிய வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2006-ல் உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில், “தமிழகத்தில் மாநில அளவில் உள்துறை செயலர் தலைமையில் டிஜிபி, சட்டம்–ஒழுங்கு கூடுதல் டிஜிபி உட்பட குழு உள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர், மூத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கொண்ட குழுவும் உள்ளது. சென்னை மாநகரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் ஆணையர் உட்பட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை 2019-இலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது” என விளக்கப்பட்டது.

நீதிபதிகள் இதனை பதிவு செய்து, மனுவைத் தீர்ப்பளித்து முடித்தனர்.

Facebook Comments Box