சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்

சிறுநீரக திருட்டு வழக்கை விசாரணை செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டிருந்தாலும், எந்த முன்னேற்றமும் இல்லை என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சிறுநீரக திருட்டு சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட கோரி, பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு முன்பே விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் நடந்த சிறுநீரக மற்றும் உடல் உறுப்புகள் திருட்டு சம்பவங்களை விசாரிக்க தென்மண்டல ஐ.ஜி. பிரேமானந்த் சின்ஹா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன், அரவிந்த் உள்ளிட்டவர்கள் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி விசாரணை நடத்தியது.

மனு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், சிறுநீரக திருட்டு சம்பவத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. இதனால் சிபிஐ விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு தற்போதும் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

Facebook Comments Box