மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை தொடர்பாக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

கோவை மாவட்டத்தில் மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் இந்து அறநிலைய துறை உரையாடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை கட்டப்பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு எதிராக விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடரி, மருதமலை வனப்பகுதிகள் யானைகளின் வழித்தடமாக பயன்படும் பகுதிகள் எனக் குறிப்பிட்டு, அப்பகுதியில் 184 அடி உயரத்தில் சிலை அமைக்க தடை விதிக்க கோரியுள்ளார்.

மனுவில், நீலகிரி வனப்பகுதிகளில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்லும் யானைகள் மருதமலை பகுதியை வழியாக பயன்படுத்துவதாகவும், 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதால் வனச்சூழல் பாதிக்கப்படுவதுடன் யானை வழித்தடங்கள் துண்டிக்கப்படும் அபாயமும் உருவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், விலங்குகள் மற்றும் மனிதர்கள் இடையே மோதல்கள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்பதால், முருகன் சிலை கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, இந்து அறநிலைய துறைக்கு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 2-ஆம் வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளனர்.

Facebook Comments Box