கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யை பார்க்க வந்தவர்களில் 50 பேரின் நிலை கவலைக்கிடம்!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 29 பேர் பலியாகியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 50 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் 20 பேர் கூட்ட நெரிசலில் சிக்கியதாகவும், அவர்கள் மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 50 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Facebook Comments Box