கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்த நிலையில், இந்த துயர்ச்சியான சம்பவத்தின் பின்னணி இதோ…

2 வயது குழந்தை: கரூர் வேலுசாமிபுரம் வடிவேல் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விமல் (25) மற்றும் அவரது மனைவி மாதேஸ்வரி (22). பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள இவர்களது ஒரே மகன் குரு விஷ்ணு, வயது 1 வருடம் 10 மாதம். சம்பவத்தன்று விமலின் சகோதரி லல்லி மற்றும் அவரது கணவர் பசுபதி (32) தங்கள் குழந்தைகளுடன் குரு விஷ்ணுவையும் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றனர். கூட்ட நெரிசலில் லல்லியின் கையிலிருந்து குழந்தை கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு: குரு விஷ்ணு கைகொள்ளப்பட்டதைப் போலவே காத்திருந்தார்.
கோகிலா, பழனியம்மாள்

தாயுடன் சென்ற 2 சிறுமிகள் உயிரிழப்பு: கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். நிலத்தரகர். இவரது மனைவி செல்வராணி. தையல் தொழிலாளி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன். வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் விஜயை பார்ப்பதற்காக செல்வராணி தனது 2-வது மகள் கோகிலா(14), 3-வது மகள் பழனியம்மாள்(11) ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே 2 மகள்களும் இறந்துவிட்டனர். படுகாயமடைந்த செல்வராணி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். உயிரிழந்த சிறுமிகள் இருவரும் ரெட்டிப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களின் மறைவுக்கு இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சாய் லக்‌ஷனா, சாய் ஜீவா (உள்படம் – ஹேமலதா)

லல்லி கூறியது: “விஜய் பேச தொடங்கியபோது மின்வெட்டு மற்றும் மைக்ரோஃபோன் கோளாறு ஏற்பட்டது. கூட்டத்தில் திடீரென மனித சுனாமி போல நெரிசல் ஏற்பட்டது. என் கையிலிருந்து குழந்தை விழுந்து உயிரிழந்தான். மீட்க முயன்றும் முடியவில்லை” என்று கதறி அழுதார்.

கோகிலா மற்றும் பழனியம்மாள்: கரூர் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் அவரது மனைவி செல்வராணி, 3 மகள்கள், ஒரு மகன் கொண்டனர். பிரச்சார கூட்டத்தில் செல்வராணி தனது 2-வது மகள் கோகிலா (14), 3-வது மகள் பழனியம்மாள் (11) ஆகியோரை அழைத்துச் சென்றார். கூட்ட நெரிசலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செல்வராணி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மனைவி மற்றும் 2 மகள்களை இழந்த கணவர்: விஸ்வநாதபுரியில் வசிக்கும் ஆனந்தஜோதி மனைவி ஹேமலதா (28) மற்றும் மகள்கள் சாய் லக்‌ஷனா (9), சாய் ஜீவா (5) ஆகியோருடன் 3 பேர் உயிரிழந்தனர். ஆனந்தஜோதி தற்போது நிர்கதியாய் இருக்கிறார்.

ஒரே ஊருக்கு சேர்ந்த 5 பேர் பரிதாப மரணம்: ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேல் மனைவி பிரியதர்ஷினி (35) மற்றும் மகள் தரணிகா (14), செல்வராஜ் மனைவி சந்திரா (40), காளியப்பன் மனைவி அருக்காணி (60), சரவணன் மகன் கிருத்திக் (7) ஆகியோர் உயிரிழந்தனர். சக்திவேல் கண்ணீர் மல்கி “விஜயின் கூட்டத்திற்கு என் மனைவி மற்றும் மகளை அனுப்பியது பெரிய தவறு” என்று கூறினார்.

அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் இருந்த இளம்ஜோடி:

கரூர் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த எம். ஆகாஷ் (26) மற்றும் கோகுலஸ்ரீ (27) இருவரும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டபோது உயிரிழந்தனர். சம்பவத்திற்கு முன்பு பிரபாகரன் செல்போனில் எடுத்த படத்தை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

உயிரிழந்த 41 பேர் விவரம்:

1. தாமரைக்கண்ணன் (25), த/பெ முருகேசன், பாகநத்தம், கரூர்

2. ஹேமலதா (28), க/பெ ஆனந்த்ஜோதி, விஸ்வநாதபுரி, கரூர்

3. சாய் லெட்சனா (8), த/பெ ஆனந்த்ஜோதி, விஸ்வநாதபுரி, கரூர்

4. சாய் ஜீவா (4), த/பெ ஆனந்த்ஜோதி, விஸ்வநாதபுரி, கரூர்

5. சுகன்யா (33), க/பெ தேவேந்திரன், வடிவேல்நகர், கரூர்

6. ஆகாஷ் (23), த/பெ மாணிக்கம், காமராஜ்புரம், கரூர்

7. தனுஷ்குமார் (24), த/பெ இளங்கோவன், காந்திகிராமம், கரூர்

8. வடிவழகன் (54), த/பெ முத்துசாமி, பசுபதிபாளையம், கரூர்

9. ரேவதி (52), க/பெ முருகேசன், கொடுமுடி, ஈரோடு

10. சந்திரா (40), க/பெ செல்வராஜ், ஏமூர் புதூர், கரூர்

11. குரு விஷ்ணு (2), த/பெ விமல், வடிவேல் நகர், வேலுசாமிபுரம், கரூர்

12. ரமேஷ் (32), த/பெ பெருமாள், கோடங்கிபட்டி, கரூர்

13. சனுஜ் (13), த/பெ ரகு, காந்திகிராமம், கரூர்

14. ரவிகிருஷ்ணன் (32), த/பெ மருதாசலம், எல்.என்.எஸ் கிராமம், கரூர்

15. பிரியதர்ஷிணி (35), க/பெ சக்திவேல், ஏமூர், கரூர்

16. தரணிகா (14), த/பெ சக்திவேல், ஏமூர், கரூர்

17. பழனியம்மாள் (11), த/பெ பெருமாள், வேலுசாமிபுரம், கரூர்

18. கோகிலா (14), த/பெ பெருமாள், வேலுசாமிபுரம், கரூர்

19. மகேஷ்வரி (45), க/பெ சக்திவேல், மண்மங்கலம், கரூர்

20. அஜிதா (21), த/பெ மணி, தொக்குப்பட்டி, அரவக்குறிச்சி

21. மாலதி (36), க/பெ கிருஷ்ணமூர்த்தி, ராயனூர் வடக்கு, கரூர்

22. சுமதி (50), க/பெ மணி, 80 அடி ரோடு, கரூர்

23. மணிகண்டன் (33), த/பெ பாலாஜி, தீர்த்தம்பாளையம், வெள்ளக்கோவில்

24. சதீஷ்குமார் (34), த/பெ துரைசாமி, கொடுமுடி, ஈரோடு

25. கிருத்திக் (7), த/பெ சரவணன், 5 ரோடு, கரூர்

26. ஆனந்த் (26), த/பெ முருகன், சுக்காம்பட்டி, சேலம்

27. சங்கர் கணேஷ் (45), த/பெ பால்ராஜ், வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை

28. விஜயராணி (42), க/பெ சக்திவேல், தாழைப்பட்டி, கரூர்

29. கோகுலபிரியா (28), க/பெ ஜெயபிரகாஷ், செம்மாண்டபாளையம், வெள்ளகோவில்

30. பாத்திமா பானு (29), க/பெ பிரபாகரன், கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம்

31. கிஷோர் (17), த/பெ கணேஷ், வடக்கு காந்திகிராமம், கரூர்

32. ஜெயா (55), க/பெ சுப்பிரமணி, வெங்கமேடு, கரூர்

33. அருக்காணி (60), ஏமூர், கரூர்

34. ஜெயந்தி (43), க/பெ சதீஷ்குமார், வேலாயுதம்பாளையம், புகளூர்

35. கோகுலஸ்ரீ (சவுந்தர்யா) (27), உப்பிடமங்கலம், கரூர்

36. ஸ்ரீநாத் (16), புதுக்காம்பள்ளி வீரக்கல் புதூர், மேட்டூர்

37. மோகன் (19), ஜம்பை, பவானி, ஈரோடு

38. பிரித்திக் (10), த/பெ பன்னீர்செல்வம், தாந்தோணிமலை, கரூர்

39. பிருந்தா (22), புதுப்பட்டி சேந்தமங்கலம், அரவக்குறிச்சி

40. கிஷோர் (18), த/பெ கணேஷ், காந்திகிராமம், கரூர்

41. கவின் (34), தொழிற்பேட்டை, கரூர்

Facebook Comments Box