தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழக அரசில் பணியாற்றி வரும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி ஆணையராக இருந்த அண்ணாதுரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பதவியில் இருந்த அ. ஜான் லூயிஸ், தற்போது ஆவின் நிர்வாக இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி ஆணையராக பொறுப்பேற்கிறார்.
மேலும், உயர்கல்வித் துறை இணைச் செயலராக பணியாற்றி வந்த க. கற்பகம், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Facebook Comments Box