விஜய்யின் பிரச்சாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ரத்து: தவெக அறிவிப்பு
கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததால், அடுத்த 2 வாரங்களுக்கு திட்டமிடப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது.
தவெக தலைமைச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், “நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், கழகத் தலைவரின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. இதற்கான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இதை நம் கழகத் தலைவரின் ஒப்புதலுடன் அறிவிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய், சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் நடத்துவார் என அக்கட்சியினர் தெரிவித்தனர். அதன்படி, அவர் அடுத்த 2 வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆனால், கடந்த சனிக்கிழமை (செப்.27) அவர் நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்ற சுற்றுப்பயணம் நடைபெற்றது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, விஜய்யின் சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவெக தெரிவித்துள்ளது.