5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது அறிவிப்பு
மதுவிலக்கு அமலாக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி: மதுவிலக்கு நடவடிக்கையில் பாராட்டத்தக்க சேவையாற்றியவர்களுக்காக, விழுப்புரம் மண்டலம், மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ப. நடராஜன்; விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மா. சத்யாநந்தன்; கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சு. மணிகண்டன்; கடலூர் மாவட்டம், புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் க. நடராஜன்; சேலம் மாவட்டம், மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் வா. பெ. கண்ணன் ஆகிய 5 பேருக்கு 2025-ம் ஆண்டுக்கான ‘காந்தியடிகள் காவலர்’ விருது முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்க உத்தரவிட்டார்.
இந்த விருது 2026-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதியன்று குடியரசு தினத்தன்று வழங்கப்படும். விருதுடன் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூ. 40,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.